சிட்னி வடக்கில் நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை வேட்டை இடம்பெற்றுவருகின்றது.
வில்கா தெருவில் நின்றுகொண்டிருந்த 28 வயது இளைஞரை இலக்கு வைத்தே இன்று அதிகாலை ஒரு மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும், தவறாக குறிவைக்கப்பட்டதால் அவருக்கு காயம் ஏற்படவில்லை. அருகிலுள்ள வீடுகள்மீதே தோட்டாக்கள் பட்டுள்ளன.
இச்சம்பவம் நடைபெற்று 20 நிமிடங்களுக்கு பிறகு காரொன்றும் எரிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு சம்பவங்களுக்கும் தொடர்புள்ளதா என்பது பற்றியும் விசாரிக்கப்படுகின்றது.
சம்பவங்கள் தொடர்பில் விசாரணை வேட்டை இடம்பெறுகின்றது.
தப்பியோடியுள்ள துப்பாக்கிதாரியை கைது செய்வதற்கான விசாரணையும் தொடர்கின்றது.