பூர்வக்குடி மக்களுக்கான இலட்சிய நிகழ்ச்சி நிரலை மீண்டும் தொடங்குமாறு பிரதமர் அந்தோனி அல்பானீஸியிடம், நல்லிணக்கத்தின் தந்தையெனக் கூறப்படும் பாட் டாட்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பூர்வக்குடி மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், அவர்களுக்குரிய நிகழ்ச்சி நிரலை ஆரம்பிக்காவிட்டால் அது கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பூர்வக்குடி மக்களுக்குரிய குரல் தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு கடந்தமுறை லேபர் ஆட்சின்கீழ் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ஆட்சியை லேபர் கட்சி 2ஆவது முறையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பூர்வக்குடி மக்களுக்குரிய விடயங்கள் பற்றி அவதானம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
உண்மை ஆணைக்குழு மற்றும் ஒப்பந்த செயல்முறையை முன்னெடுப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என்பதால் அவற்றை அரசாங்கம் செய்ய வேண்டும் எனவும் பாட் டாட்சன் அழைப்பு விடுத்துள்ளார்.
அதேவேளை, பூர்வக்குடி தலைவர்களான டாம் கால்மா மற்றும் மார்சியா லாங்டன் ஆகியோரால் 2021 ஆம் ஆண்டு மோரிசன் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட உள்ளுர் மற்றும் பிராந்திய பூர்வீக ஆலோசனை அமைப்புகளின் கட்டமைப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குரல் தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு 2023 இல் தோல்வி அடைந்ததையடுத்து பாட் டாட்சன், கூட்டாட்சி அரசியலில் இருந்து விடைபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.