இஸ்ரேல்மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி நிராகரித்துள்ளார்.
காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை தடுத்து நிறுத்தும் இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று கனடா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் எச்சரித்துள்ளன.
இந்நிலையில் இஸ்ரேல்மீது ஆஸ்திரேலியாவும் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என லேபர் கட்சியிலுள்ள பாலஸ்தீன ஆதரவுக்குழு பிரதமரிடம் கோரியுள்ளது.
இதனை அவர் நிராகரித்துள்ளார். இஸ்ரேல் விவகாரத்தில் ஏனைய நாடுகளின் அணுகுமுறையை ஆஸ்திரேலியா பின்பற்றாது எனவும், சொந்த அணுகுமுறையே கையாளப்படும் எனவும் பிரதமர் அந்தோனீ அல்பானீஸி குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் இஸ்ரேல் படைகள் உக்கிர தாக்குதல் நடத்தியுள்ளன. வைத்தியசாலைகள், பாடசாலைகள்கூட இலக்குவைக்கப்பட்டுவருகின்றன. இதனால் சிறார்கள் முதல் பெரியர்கள்வரை பலர் தினந்தோறும் செத்து மடிகின்றனர்.
இதற்கிடையில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளதால் பஞ்சமும் தலைவிரித்தாடுகின்றது. பலர் உணவின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.