ஆஸ்திரேலியாவில் 2 ஆவது முறையாகவும் அரியணையேறவுள்ள லேபர் கட்சி இவ்வருடத்தில் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் பூர்வக்குடி மக்களின் உரிமைகள் போன்ற விவகாரங்களிலும் சவால்கள் காத்திருக்கின்றன.
வாழ்க்கைச் செலவு, காலநலை மாற்றம் மற்றும் பொருளாதாம் போன்ற சவால்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளன.
மேலும் குற்றம், சுகாதார சேவைகள் , தேசிய பாதுகாப்பு மற்றும் கல்வி விவகாரம் தொடர்பிலும் பிரச்சினைகள் எழக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொருளாதார ஸ்தீரத்தன்மை என்பவற்றுக்காக அரசாங்கம் தீவிரமாக செயற்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சைபர் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பிலும் உரிய வலியுறுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான சவால்களை அல்பானீஸி அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொண்டால் லேபர் கட்சிக்குரிய ஆதரவு மேலோங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சபா.தயாபரன்