சிறைச்சாலை வாகனம் நிறுத்துமிடத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் செயற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் வாகனத்தை சோதனைக்குட்படுத்தியபோது துப்பாக்கிகள், கத்தி , கோடரி உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
20 வயது யுவதியொருவரும், 24 வயது இளைஞர் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.