எஃகு இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இது ஆஸ்திரேலிய பொருளாதாரத்துக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது.
பென்சில்வேனியாவில் நடந்த ஒரு பேரணியில், உரையாற்றுகையில், அமெரிக்காவில் எஃகுத் தொழிலை பாதுகாக்கும் நோக்கிலேயே வரி அதிகரிப்பு இடம்பெறுகின்றது என ட்ரம்ப் அறிவித்தார்.
வருடாந்தம் ஒரு பில்லியின் டொலர்கள் மதிப்பிலான எஃகு வை அமெரிக்காவுக்கு ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில் ட்ரம்பின் தீர்மானத்துக்கு ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
“ இது நியாயமற்ற நடவடிக்கை, ஒரு நல்ல நண்பரின் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல் அல்ல. இதன்மூலம் பொருளாதாரத்துக்கு பாதக விளைவுகள் ஏற்படக்கூடும்.”- எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.