முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு நாள் தொடர்பில் ஆஸ்திரேலியாவின், நியூ சவூத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் மேல் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாநில நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி டி ஆடமால் குறித்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப்போரின்போது 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மே 18 ஆம் திகதியை இனப்படுகொலை நாளாக ஆஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் சமூகமும் நினைவுகூருகின்றது. ஆஸ்திரேலியா தமிழ் நடவடிக்கைக்குழுவால் இம்முறை நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் நானும் பங்கேற்றிருந்தேன் - என்று மாநில நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி டி ஆடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழினப் படுகொலை தொடர்பில் கனடா பிரம்டன் நகரில் இனவழிப்பு நினைவகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் அவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.