ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் பொலிஸ் பாதுகாப்பின்கீழ் இருந்த பூர்வக்குடி இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகளை Northern Territory முதல்வர் நிராகரித்துள்ளார்.
24 வயதான பூர்வக்குடி இளைஞர் ஒருவர், கடையொன்றில் பாதுகாப்பு ஊழியரை தாக்கினார் எனவும், அதன்பின்னர் பொலிஸார் அவரை கைது செய்தனர் எனவும் கூறப்படுகின்றது.
கைது செய்யும்போது பொலிஸார் சிவில் உடையிலேயே இருந்துள்ளனர் எனவும், இளைஞரை இறுக பிடித்த நிலையில் அவர் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் பூர்வக்குடி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இளைஞரின் மரணம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டம் எனவும் வலியுறுத்திவருகின்றனர். மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்துவருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் உள்ளக விசாரணை நடத்திவரும் நிலையில், அதனை வெளி அமைப்பிடம் வழங்க முடியாது என முதல்வர் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எனினும், பொலிஸ் விசாரணையில் தமக்கு நம்பிக்கை இல்லை என பூர்வக்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.