சிட்னியில் இலகு ரயில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று மதியம் 1.15 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ரயில் மோதியதில் காயமடைந்த 42 வயது நபருக்கு அவசர சேவை பிரிவினர், முதலுதவி அளித்தாலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
அவர் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை. விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.