கொலம்பியாவிலிருந்து, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்துக்கு 26 கிலோவுக்கு அதிகமான கொக்கைன் போதைப்பொருளைக் கடத்திய பிரதான சூத்திரதாரிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மார்க் என்டனி டுமேனில் என்பவருக்கே பிரிஸ்பேன் உச்ச நீதிமன்றத்தால் இன்று மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட குறித்த கொக்கைன் போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 5 மில்லியன் டொலர்களென மதிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடத்தல் சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் உட்பட மூவருக்கு ஏற்கனவே சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மார்க் என்டனி டுமேனில் ஏற்கனவே இரு வருடங்கள் சிறையில் இருந்ததால் இன்னும் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு பிணைகோரி விண்ணப்பிக்க முடியும்.