உணவு விநியோக சேவையில் ஈடுபட்ட இளைஞன்மீது வாள்வெட்டு: வாகனமும் கொள்ளை!
மெல்பேர்ண் தென்கிழக்கில் உணவு விநியோக சாரதிமீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டு, அவரது இ - ஸ்கூட்டர் களவாடப்பட்டுள்ளது.
கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான 25 சாரதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவுவேளையிலேயே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் நடத்தியவர் இ - ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார். சிசிரிவி கமரா காட்சிகள் ஆராயப்பட்டுவருகின்றன. அவரை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
காமடைந்த இளைஞனுக்கு கையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.