நியூ சவூத் வேல்ஸ் மாநில பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ‘ஏஐ’ எனப்படுகின்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள்மீதான அழுத்தங்களைக் குறைக்கும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் திட்டம் அமுலுக்கு வரும் என மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது ஆசிரியர்களின் மதிப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும், அவர்களின் பணி சுமையைக் குறைத்து நேரத்தை சேமிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவரும் சூழ்நிலையிலேயே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.