பேர்த்தில் 18 வயது இளைஞர் ஒருவரைக் குத்தி கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டு, அவர்மீது கொலைக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெட்டுக்காயங்களுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவர்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.