காசாவில் உக்கிர தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறுகின்றதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிப்பதற்கு ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு தொழில் துறைக்கான அமைச்சர் Pat Conroy மறுத்துள்ளார்.
இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு, இதற்கான பதிலை வழங்குவதான் தான் சர்வதேச நீதிமன்றம் அல்ல என கூறி அவர் சமாளித்துள்ளார்.
காசாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு மீண்டும் அழைப்பு விடுத்த அமைச்சர், அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும் Pat Conroy வலியுறுத்தினார்.
அதேவேளை, இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை மட்டுப்படுத்தும் பிரிட்டனின் முடிவை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது. இது தொடர்பில் இஸ்ரேல் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.