டாஸ்மேனியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு அழைப்பு விடுக்குமாறு பிரீமியர் விடுத்த கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் ஜுலை 19 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுநர் அறிவித்துள்ளார்.
டாஸ்மேனியா பிரிமியர் ஜெர்மி ராக்கில்ப் இற்கு எதிராக லேபர் கட்சியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.
எனினும், பதவி விலக மறுத்து தேர்தலுக்கு செல்வதற்குரிய திட்டத்தை பிரீமியர் முன்வைத்தார். இந்நிலையிலேயே அக்கோரிக்கை ஏற்கப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகாலப்பகுதிக்குள் மாநிலத்தில் நடைபெறும் 4 ஆவது தேர்தல் இதுவாகும். கடந்த 16 மாத காலப்பகுதிக்குள் இடம்பெறும் இரண்டாவது தேர்தலாகவும் அமைந்துள்ளது.
பிரீமியருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அவரே கட்சியை தேர்தலில் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.