தேடுதல் வேட்டையின்போது மீட்கப்பட்ட மனித எச்சங்கள், காணாமல்போன குயின்ஸ்லாந்தை சேர்ந்த சிறுமி பியோப் பிஷப்பினுடையவை என்பதை குயின்ஸ்லாந்து பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
17 வயதான குறித்த சிறுமி மே 15 ஆம் திகதி காணாமல் போய் இருந்தார்.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் தங்கிருந்த வீட்டின் உரிமையாளரும், துணையும் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேடுதல் வேட்டையின்போது கடந்த 6 ஆம் திகதி சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவை இரசாயன பகுப்பாய்வுக்காக உரிய திணைக்களங்களுக்கு அனுப்பட்டன.
இந்நிலையிலேயே மனித எச்சங்கள், காணாமல்போன சிறுமியினது என்று குயின்ஸ்லாந்து பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.