அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி ஆகியோருக்கிடையில் நடைபெறவிருந்த முதலாவது நேரடி சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் நடைபெறும் ஜி - 7 மாநாட்டில் பங்கேற்கும் ட்ரம்ப், மாநாட்டில் இருந்து முன்கூட்டியே வெளியேறவுள்ளதாலேயே சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம், வரி விதிப்பு உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஆஸ்திரேலிய பிரதமர் கலந்துரையாட திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரம் ஆஸ்திரேலிய அரசியலிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
எனினும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரின்போது இரு நாட்டு தலைவர்களும் நேரடி சந்திப்பில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, ஜி - 7 மாநாட்டுக்கு வருகை தந்துள்ள நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மற்றும் ஐ.நா. செயலாளர் ஆகியோருடனும் ஆஸ்திரேலிய பிரதமர் பேச்சு நடத்தியுள்ளார்.