ஐரோப்பாவுக்கு அடுத்த வாரம் திடீர் விஜயத்தை மேற்கொள்வதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி திட்டமிட்டுள்ளார்.
கனடாவில் நடைபெற்ற ஜி - 7 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பு இரத்து செய்யப்பட்ட நிலையிலேயே, அவரை சந்திக்கும் நோக்கில் ஐரோப்பா செல்ல அல்பானீஸி திட்டமிட்டுள்ளார் எனத் தெரிகின்றது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால் ஜி- 7 மாநாட்டில் இருந்து ட்ரம்ப் முன்கூட்டியே வெளியேறி வாஷிங்டன் சென்றார். இதனால் இரு தரப்பு சந்திப்புகள் இரத்து செய்யப்பட்டன.
எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நேட்டோ தலைவர்கள் நெதர்லாந்து ஹேக் நகரில் ஒன்றுகூடவுள்ளனர்.
இந்நிகழ்வில் பங்கேற்று ட்ரம்ப்பை சந்திக்கவே ஆஸி. பிரதமர் திட்டமிட்டு, அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
நேட்டோ மாநாட்டில் இஸ்ரேல், ஈரான் போர் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.
அதேவேளை, நேட்டோவில் இணையுமாறு ஆஸ்திரேலியாவுக்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கனடாவில் நடைபெற்ற ஜி - 7 மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர், நாளை நாடு திரும்புகின்றார்.