இந்தோனேசியா, பாலியில் ஆஸ்திரேலியரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று ஆஸ்திரேலியர்கள் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 32 வயதான ஜிவான் ராட்மனோவிக் என்ற ஆஸ்திரேலியர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் 34 வயது நபரொருவர் காயமடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பாலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இதன் அடிப்படையிலேயே மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தோனேசியாவில் இருந்து தப்பிச்செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் எனவும், இவர்களே கொலைத்திட்டத்தை தீட்டியுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.