மத்திய கிழக்கில் இஸ்ரேல் முன்னெடுத்துவரும் தாக்குதல்களைக் கண்டிக்குமாறு ஆஸ்திரேலிய பிரதமரிடம், ஈரான் தூதுவர் அஹ்மத் சடேகி கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அணு ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டுள்ளது என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலியாவுக்கான ஈரான் தூதுவர் மறுத்துள்ளார்.
ஈரானுக்கு தன்னை தற்காத்துக்கொள்ளும் உரிமை உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய தூதுவர், இஸ்ரேல்மீதான ஈரானின் தாக்குதலை நியாயப்படுத்தினார்.
அதேவேளை, “ஈரானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்கா உடந்தையாக உள்ளது. அமெரிக்கா ‘சிவப்பு கோட்டை’ தாண்டினால் ஈரான் தக்க பதிலடி கொடுக்கும்” என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதுவர் எச்சரித்துள்ளார்.
'ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளது என்ற முடிவுக்கு வந்தால், நாங்கள் அமெரிக்காவுக்கு பதிலளிக்கத் தொடங்குவோம்.
ட்ரம்ப்பின் முற்றிலும் தேவையற்ற மற்றும் விரோதமான கருத்துகள் குறித்து ஈரான் விழிப்புடன் இருக்கிறது. ஒரு கோடு உள்ளது, அதை தாண்டினால், எங்கள் தரப்பில் பதிலளிப்போம். அமெரிக்கா சிவப்புக் கோட்டை தாண்டியவுடன், எங்களின் பதில் வரும்" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.