மெல்பேர்ணில் ஷாப்பிங் சென்டருக்குள் களவாடப்பட்ட காரை செலுத்தி - அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக ஷாப்பிங் சென்டருக்குள் காரை செலுத்தி, கண்ணாடிகளையெல்லாம் உடைத்துக்கொண்டு வாகனம் வெளியேற்றப்பட்டு, சூத்திரதாரி தப்பிச்சென்றார்.
தீவிர தேடுதலுக்கு பிறகு இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். அவர்மீது 7 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, மெல்பேர்ண் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.