சிட்னி மேற்கிலுள்ள அங்காடியொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 18 வயது இளைஞன்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை மாலைவேளையிலேயே கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 22 வயது இளைஞர் ஒருவர் தாக்குதலில் படுகாயமடைந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவந்த பொலிஸார், 18 வயது இளைஞரை நேற்று கைது செய்தனர்.
அவரை பரமட்டா நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கிடையிலான வாய்த்தர்க்கமே தாக்குதலுக்கு காரணமென சந்தேகிக்கப்படுகின்றது.