உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆஸ்திரேலியா முழுமையான பங்களிப்பை வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்தார்.
அத்துடன், நேட்டோ அமைப்பு மற்றும் போலந்தின் வேண்டுகோளுக்கமைய உக்ரைனுக்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐரோப்பாவுக்கு விமானப்படை விமானத்தை அனுப்பவும் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
உக்ரைனுக்கு ஆஸ்திரேலியா 1.5 பில்லியன் டொலர்களுக்கு அதிகமான இராணுவ ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில் ரஷ்ய பொருளாதாரத்தை இலக்கு வைத்து ஆஸ்திரேலிய புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
37 தனி நபர்கள் மற்றும் ரஷ்ய நிறுவனங்களை இலக்கு வைத்து நிதித்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.