நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் சுமார் 16 ஆயிரத்து 400 பேர் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளனர் என்று புதிய அறிக்கையொன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
தற்காலிக தொழிலாளர்கள் பலர் இன்னமும் நவீன கால அடிமைத்தன ஆபத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விவசாயம், இறைச்சி பதப்படுத்தல் மற்றும் தோட்ட வேலை உள்ளிட்ட விடயங்களில் புலம்பெயர் தொழிலாளர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஏமாற்றி ஆள்சேர்த்தல், ஆள் கடத்தல், உழைப்பு சுரண்டல், பாலியல் அச்சுறுத்தல் உள்ளிட்ட விடயங்கள் நவீன அடிமைத்தனத்துக்குள் உள்ளடங்குகின்றனர்.