ஆஸ்திரேலிய குடிவரவு சட்டத்தை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்ட 34 வயதுடைய ஆப்கானிஸ்தான் பிரஜை, இன்று போர்வுட் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
குறித்த நபர் ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸாரால் சிட்னியில் நேற்று கைது செய்தனர்.
இவர் தனது வீசாவிற்குரிய நிபந்தனைகளை மீறியுள்ளார்.
கண்காணிப்பு சாதனத்தை சரிசெய்து வைத்திருக்க வேண்டிய பொறுப்பை தவறியதோடு, அந்த சாதனம் இயங்காமை தொடர்பில் அதிகாரிகளுக்கு தகவல் வழங்க தவறியுள்ளார்.
இந்த இரு குற்றங்களுக்கும் 5 ஆண்டுகள் சிறைதண்டனை அல்லது 99 ஆயிரம் டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.