அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புடின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
“நாங்கள் இரண்டாம் நிலை வரிகளை அமுல்படுத்த இருக்கிறோம். 50 நாட்களில் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், ரஷ்யா மீது 100 சதவீத வரிகள் விதிக்கப்படும். புடின்மீது நான் மிகவும் அதிருப்தியில் இருக்கிறேன்." - என்று குறிப்பிட்டார்.
தான் சொல்லும் விஷயங்களை செய்யக்கூடிய நபராக நான் அவரை நினைத்திருந்தேன். அவர் மிகவும் அழகாக பேசுவார். ஆனால் இரவில் மக்கள் மீது குண்டுகளை வீசுவார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா அனுப்பும் ஆயுதங்களில் பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் பேட்டரிகள் இடம்பெறும்” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் செய்திகயாளர்களிடம் பேசும்போதும் கூட புடின் மீதான அதிருப்தியை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருந்தார்.
அதேவேளை, உக்ரைன்மீதான சட்டவிரோத போரை ரஷ்யா முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.
அதேபோல ரஷ்ய படைகள் மற்றும் போருக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்கள்மீது ஆஸ்திரேலியா தடைகளை விதித்துள்ளது.
உக்ரைனுக்கு பாதுகாப்புசார் ஒத்துழைப்புகளையும் கன்பரா வழங்கிவருகின்றது.