பாலஸ்தீனத்தில் காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் தனது சட்டவிரோத பிரசன்னத்தை ஓராண்டுக்குள் நிறுத்த வேண்டும் எனக்கோரும் தீர்மானம் ஐ.நா.பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
193 நாடுகளை அங்கத்துவமாகக்கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் மேற்படி தீர்மானத்துக்கு 124 நாடுகள் ஆதரவளித்தன.அமெரிக்கா உட்பட 14 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆஸ்திரேலியா உட்பட 43 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
குறித்த பிரேரணையில் பல குறைப்பாடுகள் உள்ளன எனவும் ,வாக்கெடுப்புக்கு முன்னதாக அவை கவனத்தில்கொள்ளப்படாமை கவலை அளிக்கின்றது எனவும் ஐ.நாவுக்கான ஆஸ்திரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரேரணையை திருத்துவதற்கு முற்பட்டபோதிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திரம் மற்றும் நீதிக்கான போராட்டத்தில் ஐ.நாவின் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் திருப்பு முனையாக அமையும் என பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.