யூத மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடம் சிட்னி பல்கலைக்கழகத்தின் தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
பாலஸ்தீன ஆதரவு முகாமை கையாள்வதில் தான் தோல்வியடைந்தார் என்பதையும் அவர் ஒப்புகொண்டுள்ளார்.
பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களை அகற்றி, மாணவர்களை கலைப்பதற்கு காவல்துறையை பயன்படுத்துவதற்கு சிட்னி பல்கலைக்கழக தலைவர் மறுத்துவிட்டார்.
இது தொடர்பான செனட் விசாரணையின்போதே அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஏனைய பல்கலைக்கழக துணைவேந்தர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.