இரு இளைஞர்களை பாலியல் துஷ் பிரயோகத்துக்குட்படுத்தினார் எனக் கூறப்படும் நியூ சவூத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர், குற்றவாளியென நிரூபிக்கப்பட்டுள்ளது.
44 வயதான கேரத் வார்டூ என்ற எம்.பியே இவ்வாறு குற்றவாளியென நிரூபிக்கப்பட்டு, விரைவில் தண்டனையை எதிர்கொள்ளவுள்ளார்.
2013 ஆம் ஆண்டில் 18 வயது இளைஞர் ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து துஷ்பிரயோகத்துக்குட்படுத்தினார் என இவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு மது வழங்கிவிட்டு, பின்னர் பலவந்தமாக வல்லுறவுக்குட்படுத்தினார் என குறித்த இளைஞர் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பின்னர் 2015 ஆம் ஆண்டிலும் அவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் 24 வயது இளைஞர் ஒருவரை, துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையிலேயே, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குற்றவாளியென, ஜுரிகள் முடிவெடுத்துள்ளனர்.
இவருக்கான தண்டனை தீர்ப்பு விரைவில் வழங்கப்படவுள்ளது.