இற்றைக்கு 47 வருடங்களுக்கு முன்னர் மெல்பேர்ணில் இரு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இத்தாலியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதான Suzanne Armstrong மற்றும் 27 வயதான Susan Bartlett, ஆகியோர் 1977 ஜனவரி மாதம் தமது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர். அவர்களின் உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டன.
Susan Bartlett இன் 16 மாதங்களேயான மகன் எவ்வித காயமும் இன்றி மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் பல வருடங்களாக விசாரணைகள் இடம்பெற்றுவந்தன.
இந்நிலையிலேயே இத்தாலி, ரோம் விமான நிலையத்தில் 65 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் இரட்டைக் குடியுரிமை பெற்ற நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய முயற்சியில் விக்டோரிய பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.