அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், ஆஸ்திரேலிய பிரதமருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள அந்தோனி அல்பானீஸி, மாநாட்டுக்கு முன்னதாக பைடனை நேற்றுசந்தித்தார்.
இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் கூட்டாண்மை, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
குவாட் மாநாடு இன்று ஆரம்பமாகின்றது. இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதமர்களும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இவர்களுடனும் ஆஸி. பிரதமர் இரு தரப்பு பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.