உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். இதற்கமைய ரஷ்ய அதிபர் புதினை கடந்த 15 ஆம் திகதி சந்தித்து இது குறித்து பேசினார்.
அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் டிரம்ப்-புதின் இடையே நடந்த இந்த பேச்சுசில் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து முடிவும் எட்டப்படவில்லை. இருப்பினும் பேச் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேற்று வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சந்தித்து பேச்சு நடத்தினார். ஐரோப்பிய தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ட்ரம்ப்,
" போரை முடிவுக்கு கொண்டு வர புதினும் விரும்புகிறார். இது வரை 6 பேர்களை நிறுத்தியுள்ளேன். விரைவில் உக்ரைனில் அமைதி திரும்பும். உலக நாடுகள் இந்த போரால் தளர்ந்து போய்விட்டன. இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என நம்புகிறேன். இது தொடர்பாக ரஷ்யா- உக்ரைனுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றும்.
போரில் அதிக மக்கள் உயிரிழக்கின்றனர், உக்ரைன் மக்களை நேசிக்கிறோம். இரண்டாம் உலக போருக்கு பின் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை, இதுபோன்று இனி ஒரு போர் நடக்க கூடாது. புதினுடன் பேசினேன், இந்த சந்திப்புக்கு பிறகும் புதினுடன் பேச உள்ளேன். புதின் ஒத்துழைப்பு வழங்குவார் என நம்புகிறேன். " என்று குறிப்பிட்டார்.
பேச்சு கடினம், ஆனால் சாத்தியம் . உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், இன்னும் 2 வாரங்களில் முடிவு தெரிந்துவிடும் என ட்ரம்ப் மேலும் கூறினார்.
அதேவேளை, உக்ரைனில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆஸ்திரேலியா ஏற்கனவே முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
உக்ரைன், ரஷ்ய போரில் உக்ரைன் பக்கமே ஆஸ்திரேலியா நின்றது .பாதுகாப்பு மற்றும் நிதி உதவிகளை அந்நாட்டுக்கு வழங்கியது. மறுபுறத்தில் ரஷ்யாமீது பொருளாதாரத் தடைகளையும் அமுல்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.