ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் முதல் குழுவினரை நவ்ரு ஏற்றுக்கொண்டுள்ளது.
சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுத்து வைப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் நவ்ருவுக்கு 408 மில்லியன் டொலர்களை ஆஸ்திரேலியா வழங்கியது.
இது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் 30 ஆண்டுகளில் 2.5 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட வேண்டும்.
ஆஸ்திரேலியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதலாவது குழுவினர் வந்துள்ளனர் என்று நவ்ரு ஜனாதிபதி இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதனை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.
காலவரையற்ற தடுப்பு காவல் சட்டவிரோதம் என ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் 2023 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதனையடுத்து தடுப்பில் இருந்த பலர் விடுவிக்கப்பட்டது. 303 பேர்வரையில் இவ்வாறு சமூகத்தில் விடுக்கப்பட்டுள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன. இது சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலென அரசு கருதியது.
இதனையடுத்து அவர்களுக்கு மின்னணு கண்காணிப்பு பொருத்தப்பட்டது.
நவ்ருவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களில் உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து விடுவிக்கப்பட்டவர்களுள் உள்ளடங்குகின்றனர்.