பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.
புசிபிக ; பெருங்கடலில் உருவான கால்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை புரட்டிப் போட்டது. பிலிப்பைன்சின் பாலவான் தீவு அருகே கரையை புயல் கடந்தபோது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இதனை தொடர்ந்து பெய்த கனமழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இந்த வெள்ளப்பெருக்கால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. மேலும் பல ஆறுகள் நிரம்பியதால் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். பலர் மாயமாகி இருந்ததால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த மீட்பு பணியில் 100-க்கும் மேற்பட்டோர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.
புயல் தாக்கம் காரணமாக பிலிப்பைன்ஸில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் மூடப்பட்டுள்ளது.
ஆபத்தான காற்று, மழை, வெள்ளம் காரணமாக மணிலாவில் உள்ள தூதரம் மூடப்படுகின்றது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
புயல் அபாயம் இருப்பதால் "விமான நிலைய மூடல்கள் மற்றும் விமான ரத்துசெய்தல்கள் உள்ளிட்ட போக்குவரத்தும், அத்தியாவசிய சேவைகளும் பாதிக்கப்படலாம். நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால், உங்கள் விமான நிறுவனம் அல்லது பயண வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.