பிரிஸ்பேன் தெற்கு பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை வேளையிலேயே இப்பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிதாரி தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை இடம்பெறுகின்றது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 41 வயதான நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இது இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என குயின்ஸ்லாந்து பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் கூறியுள்ளனர்.