ஜப்பானில் இன்று மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியது. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளது.
ஜப்பானின் ஹொக்காய்டோ மற்றும் டொஹோகு பகுதிகளில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வினால் கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, வடக்கு ஜப்பானின் பசிபிக் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி தெரிவித்துள்ளார். இதனிடையே, ஜப்பானில் உள்ள 182 நகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஒரு வாரத்திற்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.