துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்குவதற்கு ஆஸ்திரேலியாவின் தேசிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
சிட்னி, போண்;டியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆஸ்திரேலிய பிரஜைகள் மட்டுமே துப்பாக்கி உரித்தை பெறும் வகையில் சட்டம் வரவுள்ளது.
ஆஸ்திரேலிய மத்திய அரசாங்கத்தின் பிரதமர் அந்தோனி அல்பானீஸி தலைமையிலேயே நேற்று தேசிய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
மாநிய பிரீமியர்கள் மற்றும் பிராந்திய முதல்வர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போதே துப்பாக்கி உரித்து தொடர்பான நடைமுறைகளை வலுப்படுத்தவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
தேசிய துப்பாக்கிப் பதிவேட்டைத் தொடங்குவதை விரைவுபடுத்துதல், ஒரு நபர் வைத்திருக்கக்கூடிய துப்பாக்கிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளன.
தேசிய அமைச்சரவை யூத எதிர்ப்பு, வெறுப்பு, வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஒழிக்க உறுதியளித்தது.
சிட்னி போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
சிட்னியில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த தந்தை மற்றும் மகன் இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
தந்தை கொல்லப்பட்டுள்ளார். மகன் பொலிஸ் காவலில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.