மெல்பேர்ன் தென்கிழக்கில் நபரொருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 28 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு நடந்த இந்த கொடூர சம்பவத்தில் 27 வயது இளைஞர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவரும், தாக்குதலுக்கு இலக்கானவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகினறன.