அடிலெய்டில் 12 வயது சிறுமிமீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மூன்று யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாலிஸ்பரி பஸ் தரிப்பிட பகுதியிலேயே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமிமீது தாக்குதல் நடத்திவிட்டு, சந்தேக நபர்கள் ரயிலில் தப்பியோடிவிட்டனர்.
படுகாயமடைந்த நிலையில் சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பில் விசாரணை வேட்டை ஆரம்பமான நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று யுவதிகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது, விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.