மெல்பேர்னில் இளைஞர் ஒருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாக்குவாதம் மோதலாக மாறிய பின்னரே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.