ஆஸ்திரேலிய எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடிப்பை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இதற்கமைய குயின்ஸ்லாந்து மற்றும் டோரஸ் நீரிணை பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துமீறுபவர்களின் படகு மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை குயின்ஸ்லாந்து நீர்ப்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 10 வெளிநாட்டு படகுகளை ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை (Border Force) தடுத்து நிறுத்தியுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வெளிநாட்டு மீனவர்கள் ஆஸ்திரேலிய நிலப்பரப்பை அடைந்துள்ளதற்கான ஆதாரங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.