மேற்குக் கரையை (West Bank) கையகப்படுத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியாவும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த நகர்வுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையிலேயே ஆஸ்திரேலியாவும் தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
பாலஸ்தீன நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில் தமது இருப்பை நிலைநாட்டுவதற்கு இஸ்ரேல் தீவிரம் காட்டிவருகின்றது.
இதன் ஓர் அங்கமாக மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலி குடியேற்றங்களை விரிவுபடுத்திவருகின்றது.
சுயாதீன பாலஸ்தீனம் மலர்வதை தடுப்பதே இஸ்ரேலின் நோக்கம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்குக் கரைமீதான ஆக்கிரமிப்புகுறித்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையின் முடிவை ஆஸ்திரேலியா கண்டிக்கின்றது.
சர்வதேச சட்டத்தின் கீழ் மேற்படி குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை என்றும், அமைதி முயற்சிக்கு அது தடையாக அமையும் எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் மக்கள்தொகை அமைப்பை மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கூறியுள்ளார்.