ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, அங்கு புதிய தலைவரை தெரிவு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது. இதில் காமேனியின் மகன் மொஸ்தபா காமேனி புதிய உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது
இந்நிலையில், ஈரானின் உச்ச தலைவராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, மத்திய கிழக்கு போர் இன்று 10 ஆவது நாளாக தொடர்கின்றது.
ஐக்கிய அரபு அமீகரகத்தில் உள்ள ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களை அங்கிருந்து வெளியேறுமாறு ஆஸ்திரேலியா அறிவுறுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஆயிரத்து 800 இற்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் நாடுதிரும்பியுள்ளனர்.