மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு விதிமுறைகளைமீறி குழப்பத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் அவர்களை கைது செய்யும்போது ஒருவர், பொலிஸாரை தாக்க முற்பட்டார் எனவும் கூறப்படுகின்றது.
மேற்படி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் சுமார் 50 வரையான மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள இரு மாணவர்களும் விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.