இலங்கை கடலோரக் காவல்படைக்கு ஆஸ்ரேலியா 12 கண்காணிப்பு ட்ரோன்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
மிரிஸ்ஸவில் உள்ள இலங்கை கடலோரக் காவல்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போதே ட்ரோன்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்ரேலியாவின் கடல் எல்லைக் கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் பிரட் சோன்டர் , இலங்கை கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப்பிடம் 12 கண்காணிப்பு ட்ரோன்களையும் முறைப்படி கையளித்துள்ளார்.
இந்த நிகழ்வில், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் மற்றும் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த கண்காணிப்புக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு கடல்சார் எல்லை முகாமைத்துவத்தில் ஆஸ்திரேலியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.