Northern Territory டெனண்ட் க்ரீக் பகுதியில், வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த நபர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
31 வயதுடைய இளைஞர் ஒருவரே, தனக்குத் தெரிந்த நபரொருவரால் பலமுறை உடல் ரீதியாகத் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் துணைவி உடனடியாகத் தலையிட்டுத் தடுத்ததால், காயமடைந்தவர் மீட்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 23 வயதுடைய இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
இந்த வன்முறைச் செயல் குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், இது தொடர்பான கூடுதல் தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.