" தேர்தலில் போட்டியிட்டு வெல்வதைவிடவும் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்." - என்று சுயாதீன செனட்டர்
Lidia Thorpe தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் மன்னர் மற்றும் ராணி ஆகியோர் நேற்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர்.
இதன்போது அவர்களுக்கு எதிராக சுயாதீன செனட்டர்
Lidia Thorpe , கோஷங்களை எழுப்பினார்.
இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன், செனட்டர்
Lidia Thorpe உடன் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உண்மையை பேசுவதற்கு எதற்கும் தான் தயங்கபோவதில்லை என செனட்டர் சூளுரைத்துள்ளார்.
தான் பதவி விலகபோவதில்லை எனவும்
Lidia Thorpe அறிவித்துள்ளார்.
அதேவேளை, பிரிட்டிஷ் மன்னரின் வருகைக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போராட்டங்களும், செனட்டரின் எதிர்ப்பு நடவடிக்கையும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது.