பிரிட்டிஷ் மன்னர் மற்றும் ராணியின் வருகைக்கு எதிராக சிட்னி Opera House இற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட பூர்வக்குடி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
' இவர் திருடர்களின் ராஜா, பொய்யர்களின் ராஜா, இவர் குற்றவாளி, உடன் கைது செய்ய வேண்டும்." - என்று கூட்டத்துக்கு மத்தியில் அவர் கோஷம் எழும்பியுள்ளார்.
மன்னரையும், ராணியையும் வரவேற்க பெருந்திரளானோர் அங்கு திரண்டிருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு எதிராக பூர்வக்குடி நபரொருவர் கோஷம் எழுப்புவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பாதுகாப்பு தரப்பினரால் அவர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் வேனில் ஏற்றப்பட்டார்.
பிரிட்டிஷ் மன்னரை கைது செய்யுமாறு கன்பராவில் பொலிஸாரிடம் முறைப்பாடு கையளிப்பதற்கு முற்பட்டபோதும் எனது தந்தை தடுத்து நிறுத்தப்பட்டார் என்று கைது செய்யப்பட்டவரின் மகள் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டிருந்தாலும் பூர்வக்குடி மக்களுக்கான அவரின் போராட்டத்தை ஒருபோதும் நிறுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.