Perth உள்ள பல்பொருள் அங்காடியில், தாயின் அரவணைப்பில் இருந்த குழந்தைமீது தாக்குதல் நடத்திய 21 வயது யுவதியொருவர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி குழந்தையை தாக்குவது தொடர்பான சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது.
தாயொருவர் குழந்தையை அரவணைத்துக்கொண்டிருந்தார், அவ்வேளையில் அவர்களை அணுகிய பெண், குழந்தையை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் பின்னர் பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கினர். குறித்த பெண் இன்று கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.