மெல்பேர்ண் நகரில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நபரை தாக்கி கொலை செய்தார் எனக் கூறப்படும் நபர், தலைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
44 வயது நபரொருவரே கடந்த 9 ஆம் திகதி கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை வேட்டையில் இறங்கிய பொலிஸார், 33 வயது சந்தேக நபரை நேற்று கைது செய்தனர். விடுதியொன்றில் மறைந்திருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார். நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.